×

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கொலையான பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு

அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட் பகுதியில் கடந்த 18ம் தேதி இரவு ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், இளம்பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார், அவரை கொலை செய்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பெண், தாம்பரம் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த தேவி (25), என்பதும், அவருடன் இருந்த வாலிபர் குணா என்பவர் எனவும் தெரியவந்துள்ளது. இருவரும் பல மாதங்களாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்தான் தேவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு தப்பிேயாடிய குணாவை கோயம்ேபடு போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

Tags : Goyampade ,
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கொலையான...