×

கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சிவகாசி, பிப். 20: சிவகாசி ஹயக்ரீவாஸ் இன்டர்நேசனல் பள்ளியில் பாரதி கல்வி மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில், மாவட்ட அளவிலான செஸ் மற்றும் கேரம் போட்டி நடைபெற்றது. துர்க்கா வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். முதல்வர் அம்பிகாதேவி போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 400 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஹயகிரீவாஸ் பள்ளி முதலிடம் பிடித்தது. திருவில்லிபுத்தூர் அரிமா சர்வதேச பள்ளி இரண்டாம் இடம் பிடித்தது. பள்ளி தாளாளர் ஜெயக்குமார், தலைவர் வெங்கடேஸ் பிரசாத், தொழில் பிரமுகர்கள் சுயம்புராஜ், குருராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். முடிவில் ரமேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கதிரேசன், ஹேமலதா, ஒருங்கிணைப்பாளர் பிரியா, பயிற்சியாளர்கள் சித்ரா, கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : match ,Caram ,
× RELATED ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன்...