திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதிகளில் காளாச்சேரி, சித்தமல்லி, கடம்பூர், பரப்பனாமேடு,ராயபுரம்,காளாஞ்சிமேடு ,ராஜப்பையன்சாவடி, பெரம்பூர் அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நடவு செய்த வயல்களில் பெரும்பாலான இடங்களில் இயந்திரம் மூலம் அறுவடை முடிந்துள்ளது.சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன் கூட்டியே அறுவடை செய்த விவசாயிகள் கோடை சாகுபடி செய்ய நாற்றங்காலை தயார் செய்து நாற்று விட்டு தற்போது நடவு பணிக்காக உழவு பணியை தொடங்கியுள்ளனர்.நேற்று முன்தினம் தஞ்சை சாலை கடம்பூர் பகுதியில் கோடை நடவு நட உழவு பணி நடந்தது.மேடு உள்ள இடங்களை தொழிலாளர்கள் சமன் தெய்தனர்.இந்த பணி பல்வேறு இடங்களில் நடை பெற்று வருகிறது.