×

குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 3 பாம்புகள்

நாமக்கல், பிப்.20: நாமக்கல்  கொண்டிசெட்டிப்பட்டி அசோக் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில், பழைய சிமெண்ட் பைப்புகளை அடுக்கி வைத்துள்ளனர். இதில், கண்ணாடி விரியன் பாம்புகள் இருப்பதை பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அலறினர். இது பற்றி நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் பொன்னுசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள், பைப்புக்கு அடியில் பதுங்கி இருந்த 3 கண்ணாடி விரியன் பாம்புகளை பிடித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். பிடிபட்ட 3 பாம்புகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...