பட்டிவீரன்பட்டி, பிப். 20: பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலில் மாசி சதுர்தசி விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி தில்லை நடராஜருக்கும், உடனுறை சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர்மக்கள் இணைந்து செய்திருந்தனர்.