×

பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது

சிவகாசி தெய்வானை நகரை சேர்ந்த பாலாஜி மனைவி ஹேமா (40). இவர் தனது வீட்டிற்கு அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அய்யனார் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (23), ஹேமாவின் கழுத்தில் இருந்த தங்கச்செயினை பறிக்க முயன்றார். ஹேமா இறுக பிடித்துக் கொண்டதால் நகை தப்பியது. அவரை கீழே தள்ளி விட்டு மணிகண்டன் தப்பினார். இது தொடர்பான புகாரின் பேரில், சிவகாசி டவுன் போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு