×

அந்தியூர் அருகே மருமகளுக்கு பாலியல் தொந்தரவு மாமனார் உள்பட இருவர் மீது வழக்கு

பவானி, பிப். 12: அந்தியூர் அருகே மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார் உள்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.  சேலம் மாவட்டம், பண்ணப்பட்டியை சேர்ந்தவர் மாதையன் மகள் பேபி (22). இவருக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் பின்புறம் வசிக்கும் தவசி மகன் கார்த்திக் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் கணவன்-மனைவி இடையே எவ்வித தாம்பத்திய உறவும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கார்த்திக்கின் தந்தை தவசி (50), மருமகள் பேபியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். மேலும் மாமியார் லட்சுமியுடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பேபி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெண்வன்கொடுமை சட்டம், வரதட்சனை கொடுமை ஆகிய பிரிவின் கீழ் போலீசார் தவசி, லட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags : father-in-law ,daughter-in-law ,Atiyur ,
× RELATED மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தொடங்கியது..!!