×

தனிநபர் கழிப்பறைகளை பார்வையிட வந்த உதவி இயக்குனர் அவதூறு பேச்சு செவல்பட்டி கிராம மக்கள் புகார்

விருதுநகர், பிப். 12: செவல்பட்டி கிராமத்தில், தனிநபர் கழிப்பறைகளை பார்வையிட வந்த உதவி இயக்குனர் அவதூறாக பேசியதாக, அந்த கிராம மக்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில், ‘கூரைக்குண்டு ஊராட்சி செவல்பட்டி கிராமத்தில் பிப்.9ம் தேதி தனிநபர் கழிப்பறைகளை உதவி திட்ட இயக்குநர் (பசுமை வீடுகள்) வர்க்கீஸ் பாவையிட வந்தார். அப்போது அவரின் கண் முன்னே கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு செலவிடும் பணம் வீண் என தெரிவித்தார். அதிகாரி மக்களிடம் தனக்கு முன்பாக கழிப்பறையை பயன்படுத்தும்படி எப்படி கூறலாம். மேலும், சமுதாய ரீதியாக இழிவாக பேசினார். தரக்குறைவாக பேசிய உதவி திட்ட இயக்குநரை இடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை தனிநபர் கழிப்பறைகளை பயன்படுத்த மாட்டோம். தனிநபர் கழிப்பறையும் தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.

Tags : Assistant Director ,Chevalpatti ,
× RELATED கோடை வெயிலில்குறைந்த நீரை...