×

தூத்துக்குடியில் பிப். 26ம் தேதி கடல்மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

தூத்துக்குடி, பிப். 12: தூத்துக்குடியில் கடல்மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் 26ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம் மூலம் மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கு கடல் மீன் வளர்ப்பு மற்றும் கூண்டுகளில் மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். முகாமில் பங்குபெற விரும்பும் மீனவர்களுக்கு தினமும் ரூ.300 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 18ம் தேதிக்குள் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் ரோச் பூங்கா அருகேயுள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானியிடம் பதிவு செய்யவேண்டும். பயிற்சி வகுப்பில் பங்கு பெறும் நபர்கள் மீனவர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டுவரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Marine Fisheries Training Camp ,
× RELATED உடன்குடி நூலகத்தில் புதிய புரவலர் சேர்க்கை