×

ஆபாசமாக பேசியதை கண்டித்ததால் பெண்ணை சரமாரி தாக்கிய வாலிபர் கைது

தேனி, பிப். 8: தேனி-அல்லிநகரத்தில் ஆபாசமாக பேசியவரை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி-அல்லிநகரத்தில் வீரப்பஅய்யனார் கோயில் செல்லும் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் அப்பாஸ் மனைவி ஜெரினாபேகம் (50). அல்லிநகரம் பாத்துமா தியேட்டர் பகுதியைச் சேர்ந்த நல்லுச்சாமி மகன் கார்த்திக் (21). இவர் பெட்டிக்கடை முன்பாக உள்ள சங்கிலிக்கருப்பன் கோயில் பகுதியில் கார்த்திக் தன் நண்பர்களுடன் நின்று கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதனை ஜெரினாபேகம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் ஜெரினாபேகத்தை சரமாரியாகத் தாக்கினார். இதில் காயமடைந்த ஜெரினாபேகம் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஜெரினாபேகம் அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார், கார்த்திக்கை கைது செய்தனர்.

Tags :
× RELATED வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு