×

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு இல்லை

கொடைக்கானல், பிப். 8: கொடைக்கானலில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களில் டீசல் திருடி வந்த திருப்பூரை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் கடந்தவாரம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் டீசல் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கம், வாகன ஓட்டுனர்கள் சார்பாக கொடைக்கானல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் டீசலை திருட 2 இளைஞர்கள் முயன்றனர். இதை கண்காணித்த போலீசார் உடனே இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த கார்த்திக் (28), பல்லடம் காந்திநகர் காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜாகிர்உசேன் (24) என்பது தெரிந்தது. மேலும் இவர்கள் திருப்பூரிலிருந்து கார்த்திக்கிறது சொந்தமான காரில் வந்து பின் இரவுநேரங்களில் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை நோட்டமிட்டு டீசலை திருடி வந்தது தெரிந்தது. கொடைக்கானல் சப்இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் டீசல் திருடுவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Velankanni ,
× RELATED ஈஸ்டர் சண்டே விழாவில் பங்கேற்க...