நாமக்கல், பிப். 7: நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் “உலகலாவிய தொழிற்முனைவோர் உட்புகுதல்” என்னும் தலைப்பில் பன்னாட்டு அளவிலான பயிற்சி பட்டறை நடைபெற்றது. தாளாளர் டாக்டர். செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத்தாளாளர் பாபு, செயலர் கவீத்ரா நந்தினி பாபு, முனைவர் அருள்சாமி, நிர்வாக இயக்குநர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜவேல் வரவேற்றார். துணை முதல்வர்கள் கவிதா, தாமரைச்செல்வன், குணசேகரன், புலமுதன்மையர்கள் எழிலரசு, பத்மநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக இலங்கை தென்கிழக்கு மாகாண பல்கலைக்கழக மேலாண்மை மற்றும் வணிகவியல் பேராசிரியர் இஸ்மாயில் கலந்து கொண்டு பேசினார். இந்த பயிற்சி பட்டறையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். பட்டறை ஏற்பாடுகளை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் துறைத்தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.