×

சட்டக்கல்லூரி மாணவர்களிடையே கைகலப்பு

வேலூர், பிப்.7: வேலூர் சட்டக்கல்லூரியில் 3 மற்றும் 5 ஆண்டு படிப்புகளில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சீனியர் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அவதூறாக பேசிக்கொண்டு மோதலில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது. இதுகுறித்து தகவல் அறிந்த சட்டக்கல்லூரி முதல்வர் சாந்தி, இருதரப்பு மாணவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவர்கள் மோதலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Law folks ,
× RELATED ₹13.12 லட்சம் மோசடி செய்த ஊழியர்...