×

காற்றில்லா சைக்கிள்களால் மாணவிகள் கடும் அவதி

மணமேல்குடி, பிப்.6: மணமேல்குடி அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்களில் இரு டயர்களிலும் காற்று இல்லாததால் மாணவிகள் வீடு வரை சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தே சென்றனர்.
மணமேல்குடி அரசு பெண்கள் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த சைக்கிளில் உள்ள இரு வீல்களிலும் காற்று அடித்து கொடுக்கப்படாததால் மாணவிகளில் சிலர் வீடுவரை சைக்கிளை வெறும் டயருடன் தள்ளிக்கொண்டு சென்றனர். சில மாணவிகள் சைக்கிள் கடைகளில் காசு கொடுத்து டயருக்கு காற்று நிரப்பி ஓட்டிசென்றனர். இதனால் பொதுமக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். ஒருசில மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் பள்ளிக்கு வந்து சைக்கிளை கொண்டு சென்றனர்.

Tags : Girls ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்