நாகர்கோவில், பிப். 6: நாகர்கோவில் ஊட்டு வாழ்மடம் பகுதிக்கு செல்ல ரயில் நிலையம் அருகே கிராசிங் உள்ளது. கிராசிங் பகுதியை ஒட்டி புதர்கள் மண்டி கிடக்கிறது. நேற்று இந்த புதரில் தீ பிடித்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து ெசன்று புதரில் பிடித்த தீயை அணைத்தனர். ரயில் நிலையம் அருகே நெல்லை, திருவனந்தபுரம் தண்டவாளம் பிரியும் பகுதியில் மூங்கில்கள் காடு போல் வளர்ந்து இருந்தது. இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கம். பின்னர் மூங்கில்களை ரயில்வே நிர்வாகம் அகற்றியது குறிப்பிடத்தக்கது.