×

பொன்னமராவதி அருகே கேசராபட்டி-மைலாப்பூர் சாலை படுமோசம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொன்னமராவதி, பிப்.5: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி- மைலாப்பூர் குண்டும், குழியுமாக  ஜல்லிகள் பெயர்ந்துள்ள சாலையினை சீர் செய்து தார்சாலை அமைக்கவேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதியில் இருந்து உலகம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில்  கேசராபட்டியில் இருந்து மைலாப்பூர், அஞ்சுபுளிப்பட்டிக்கு செல்லும்  இணைப்புச்சாலை உள்ளது. இந்த சாலை யில் மெட்டல் மட்டும் கடந்த 6 ஆண்டுக்கு  முன் போடப்பட்டது.  இதன் பின்னர் இந்த சாலை எவ்வித பராமரிப்பு பணிகளும்  செய்யப்படவில்லை. இதனால் இந்த சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து  போக்கு வரத்துக்கு சென்று வரமுடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. எனவே பொதுமக்கள்  சிரமமின்றி இந்த சாலையில் சென்றுவர குண்டும் குழியு மாக, ஜல்லிகள்  பெயர்ந்து மிகவும் மோசமாக உள்ள இந்த சாலையினை சீர் செய்து தார்சாலையாக  போடவேண்டும் என பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kesarapatti-Mylapore ,Ponnaravady ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி