×

காவேரிப்பாக்கம் அருகே பரபரப்பு கல்லூரி மாணவி உட்பட 3 பேர் மாயம் பெற்றோர் போலீசில் புகார்

காவேரிப்பாக்கம், பிப்.2:காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், 27ம் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், கல்லூரிக்கும் செல்லவில்லை, வீட்டிற்கும் வரவில்லை.இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து, பெண்ணின் தந்தை நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல், காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கலைச்சந்திரன் மகன் சாரதிதர்சன்(14), மற்றும் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த உதயகுமார் மகன் அரசு(14), நண்பர்களான இருவரும் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 30ம் தேதி காலை பள்ளிக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு சென்றவர்கள் பள்ளிக்கும் செல்லவில்லை, மீண்டும் வீட்டிற்கும் திரும்பி வரவில்லை இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் இரு மாணவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் சமேதா ஆகியோர் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : persons ,college student ,Kavaripakkam ,
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்