சூரமங்கலம், பிப்.1: சேலம் மத்திய மாவட்ட அமமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைமைக் கழக செயலாளர் பழனியப்பன் பேசும்போது, வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளிடம் விளக்கமாக எடுத்து கூறினார். கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெங்கடாசலம், அவைத்தலைவர் செந்தில்நாதன்(எ) ரவி உள்பட சேலம் மாநகரத்திற்குட்பட்ட 60 டிவிசன், கன்னங்குறிச்சி பேரூராட்சி, ஓமலூர் கிழக்கு, சேலம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.