×

பைக்கிலிருந்து விழுந்து இருவர் காயம்

சாத்தான்குளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து  இருவர் படுகாயமடைந்தனர். சாத்தான்குளம் அருகே பொத்தக்காலன்விளையை சேர்ந்தவர் இஸ்ரவேல் மகன் சதிஷ்குட்டி(25) இவரும் அதே ஊரை சேர்ந்த  மிக்கேல்ராஜ் மகன் லிவிங்ஸ்டனும்(25) பைக்கல் சாத்தான்குளம் வந்தனர். சதிஷ்குட்டி பைக்கை ஓட்டினார். லிவிங்ஸ்டன் பின்னால் இருந்து வந்தார். சுப்பிரமணியபுரம் அருகே வரும்பொழுது  பைக் நிலை தடுமாறியதில் பைக்கிலிருந்து சதிஷ்குட்டியும், லிவிங்ஸ்டனும் கீழே விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தார். பலத்த காயமடைந்த லிவிங்ஸ்டன் தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்ட்டுள்ளார்.  இதுகுறித்து லிவிங்ஸ்டன் தந்தை மிக்கேல்ராஜ் புகாரின்பேரில் தட்டார்மடம் எஸ்ஐ கார்த்திகேயன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொழிலாளி மீது தாக்குதல்சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்குளம் உடையாண்டி பகுதியை சேர்ந்தவர் கோயில்ராஜ் மகன் ராஜ்குமார்(37) தொழிலாளி இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இதனிடையே ராஜ்குமாரிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்குமுன் ராஜ்குமார், குடிபோதையில் சென்று முருகன் மனைவி சுப்புலட்சுமி(27)யை  அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுப்புலட்சுமியின் சகோதரர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர், நேற்றிரவு ராஜ்குமாரிடம் வீட்டை காலிசெய்யுமாறுகூறி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த ராஜ்குமார், வைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் சாத்தான்குளம் எஸ்.ஐ.லாரன்ஸ் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட சுப்பு லட்சுமியின் சகோதரர் மற்றும் உறவினர்கள் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த மருதநாயகம், சுந்தர், குணா, மணி, சிரஞ்சீவி, கதிரேசன் ஆகிய 7பேரையும் தேடி வருகிறார்.

Tags : bikers ,
× RELATED வேலூரில் திருட முயன்ற 2 பைக் ஆசாமிகள் கைது தப்பியோடிய 4 பேருக்கு வலை