×

முத்துப்பேட்டையில் வாலிபர் மாயம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை திமிலத்தெருவை சேர்ந்தவர் முகமது சேக்தாவூது மகன் அப்துல் அஜீஸ்(31) டிரைவர்.  இவரது மகன் முஜாஹிதீன்(17). கடந்த 23ம் தேதி முதல் காணவில்லை. இதனையடுத்து அப்துல் அஜீஸ், மகன் முஜாஹிதீனை உறவினர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அப்துல் அஜீஸ் முத்துபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் முஜாஹிதீனை தேடி வருகிறார்.



Tags : thirties ,
× RELATED முத்துக்கள் முப்பது: கால(ன்) பயம் நீக்கி ஆயுள் அதிகரிக்கும் கால பைரவர்