×

மாடு முட்டிய தொழிலாளி பலி

அலங்காநல்லூர்,ஜன.31: மதுரை அலங்காநல்லூரில் கடந்த 17ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடந்தது. குறவன்குளத்தை சேர்ந்த மருதைமுத்தன்(61) என்ற கூலித் தொழிலாளி ஜல்லிக்கட்டைப் பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெரியாறுகால்வாய் கரை வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது காளை ஒன்று மருதைமுத்தனை முட்டி தள்ளிவிட்டு ஒடிவிட்டது. இதில் அவர் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்ததில் தலை,நெஞ்சு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படுகாயமடைந்தார். இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனினறி நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்தார். அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags : Coworker ,
× RELATED சோழவந்தான் அருகே டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி