×

மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் அவதி

வத்தலக்குண்டு, ஜன. 31: வத்தலக்குண்டுவில் மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். வத்தலக்குண்டு பேரூராட்சிக்குட்பட்டது மாப்பிள்ளையான் தோப்பு மயானம். பேரூராட்சி சார்பில் இங்கு ஆழ்துளை கிணறுடன், தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மின்மோட்டார் பழுதடைந்ததால், சரிசெய்வதற்காக பேரூராட்சி பணியாளர்கள் எடுத்து சென்றனர். ஆனால் இதுவரை மின்மோட்டார் சரி செய்து பொருத்தவில்லை. இதனால் இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்காக கொண்டு வருபவர்கள், ஈம சடங்குகளை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ேகாரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : cemetery ,
× RELATED திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி...