×

தெருமுனை பிரசார கூட்டங்கள் திமுக சிறுபான்மை பிரிவு கூட்டத்தில் முடிவு

நாகர்கோவில், ஜன.31: ஒன்றிய, நகர அளவில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.குமரி கிழக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. திமுக மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் ஷபீக் தலைமை வகித்தார். நகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேசினார். மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர்கள் லாரன்ஸ், ஜோசப்ராஜ், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தாமரை செல்வன், மாவட்ட பொருளாளர் கேட்சன், பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவுது, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்கள் ரத்தினமணி, தாமஸ், செல்வின் சுபாஷ் மற்றும் ஒன்றிய, நகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட துணை அமைப்பாளர் சாதிக் நன்றி கூறினார். கூட்டத்தில் ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் ஏசுபாதம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  ஒவ்வொரு ஒன்றியம் மற்றும் நகரங்களில் தெருமுனை பிரசாரம் நடத்துவது, திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் ஆதி திராவிடர் சமூகத்திற்கு செய்த சாதனைகளை அச்சிட்டு துண்டு பிரசுரங்களாக மாவட்ட அளவில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விநியோகம் செய்யவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





Tags : street proclamation meetings ,minority group meeting ,DMK ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்