களக்காடு, ஜன. 31: களக்காடு அருகே உள்ள மேலவடகரை குருந்துடையார் சாஸ்தா கோயிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சிறப்பு யாக சாலை பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் அபிஷேகம் நடத்தினர். அத்துடன் குருந்துடையார் சாஸ்தா, பிரம்மராட்சசி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி களக்காடு சத்தியவாகீஸ்வரர் திருவாசக குழுவினர், குழு தலைவர் சிவமுருகன் தலைமையில் திருவாசக முற்றோதுதல் நடத்தினர். விழாவில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.