×

ஐகோர்ட் பதிவாளர் தடையை மீறி கோவையில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை,ஜன.30: ஐகோர்ட் பதிவாளரின் தடையை மீறி ஜாக்டோ- ஜியோ ஊழியர்களுக்கு ஆதரவாக கோவையில் நீதித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நேற்று முதல் தலைமை செயலக ஊழியர்கள், நீதித்துறை ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்றுமுன் தினம் சென்னை ஐகோர்ட் பதிவாளர் அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் அந்தந்த மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ சங்கத்திற்கு ஆதரவாக நீதித்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே பதிவாளரின் உத்தரவை மீறி கோவையில் நீதிமன்றம் முன்பு கோவை மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமையில் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 20 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : jury ,registrar ,Coimbatore ,
× RELATED நடப்பாண்டில் ரூ.16,500 கோடி இலக்கு; புதிய...