×

வரும் மார்ச்.31ந் தேதிக்குள்நலவாரிய உறுப்பினர்கள் புதுப்பிக்க அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜன. 30:சிவகங்கை சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(பொ) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளதாவது: மாநில அளவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையிலும் ஒழுங்குப்படுத்தும் நோக்கத்திலும் அரசு நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு அதன்மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியம், அமைப்புசாரா ஒட்டுநர்கள் நலவாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம், முடித்திருத்துவோர் நலவாரியம், சலவைத் தொழிலாளர் நலவாரியம், பனைமரத் தொழிலாளர் நலவாரியம், காலணி தோல் பொருட்கள் உற்பத்தி, தோல் பதனிடுதல் தொழிலாளர் நலவாரியம், ஓவியர் நலவாரியம், பொற்கொல்லர் நலவாரியம், மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியம், வீட்டுப்பணியாளர் நலவாரியம், சமையல் தொழிலாளர் நலவாரியம் உள்பட 17நலவாரியங்களில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் ஒரு இலட்சம் பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை எண்ணுடனஆதார் அட்டை எண்ணையும் இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த, மேற்கண்ட வாரியங்களில் பதிவு செய்த இதுவரை புதுப்பிக்காத தொழிலாளர்கள் மற்றும் ஆதார் எண் விபரத்தை தெரிவிக்காத தொழிலாளர்கள் தங்களது அடையாள அட்டை நகலுடன், ஆதார் அடையாள அட்டை நகலை இணைத்து வரும் மார்ச் 31ம் தேதிக்குள் மதுரை ரோடு, மாதா கோவில் எதிரில் இயங்கி வரும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Tags : voucher members ,
× RELATED கோடை கால பயிற்சி முகாம்