×

கறம்பக்குடியில் 8வது நாளாக ஜாக்டோ ஜியோ போராட்டம் பள்ளிகள் திறக்காததால் மாணவர்கள் அவதி

கறம்பக்குடி, ஜன.30: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 84அரசு தொடக்க பள்ளியும், 29 அரசு நடுநிலை பள்ளிகளும், அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி மொத்தம் 4 என 117 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பள்ளிக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு உதவி பெறும் 4 பள்ளிகளை தவிர கறம்பக்குடியில் இயங்கி வரும் பெரும் பாலான பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர் ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் குறிப் பாக மாணவ மாணவிகள் பள்ளி திறக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின் றனர் ஒரு சில பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் வராததன் விளை வாக மாணவ மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். கறம்பக்குடியில் தொடர்ந்து நேற்று வரை ஆசிரியர் ஆசிரியைகள் 8வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : schools ,opening ,protest ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...