×

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை

திருப்பத்தூர், ஜன.30: திருப்பத்தூர் அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் தேவகி(23). நாட்றம்பள்ளி அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(28), கட்டிட தொழிலாளி.  இவர்கள் இருவருக்கும் கடந்த 6  மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் தேவகி கர்ப்பமாகி ஒரே மாதத்தில் கரு கலைந்ததாம். இதனால், அவர் மன வேதனையில் இருந்து வந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் அவ்வை நகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் படுக்கை அறைக்கு சென்ற அவர், திடீரென மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டாராம்.

தீ உடல் முழுவதும் பரவியதால் அலறி துடித்தார். இவரது சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை