×

பசுவந்தனை அருகே இளம்பெண் மர்மச்சாவு

ஓட்டப்பிடாரம், ஜன.25:தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகேயுள்ள கண்ணக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவசுப்பிரமணியன். இவரது மனைவி முத்துமாரி(28). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. சிவசுப்பிரமணியன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ம்தேதி சிவசுப்பிரமணியன் குடித்து வந்து மனைவியை தகராறு செய்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் மிதித்துள்ளார். இதனால் வலியால் துடித்த அவர் எட்டயபுரம் அருகே பெத்தாபுரத்தில் உள்ள தாய் ராஜேஸ்வரியின்  வீட்டிற்கு சென்றுவிட்டார்.
 நேற்று முன்தினம் முத்துமாரி மீண்டும் தனது வயிற்றில் அதிக வலி இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் முத்துமாரியை எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் ராஜேஸ்வரி பசுவந்தனை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவுக்கு அவரது கணவர் சிவசுப்பிரமணியன் தான் காரணம் என தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்த முத்துமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆவதால் கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா விசாரணை நடத்தி வருகிறார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்தான் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.






Tags : Pasavantan ,
× RELATED பசுவந்தனை அருகே விவசாயி வீட்டில் நகை ரூ.1 லட்சம் கொள்ளை