×

அளவுக்கு அதிகமாக பிளக்ஸ் அமமுக நகர செயலாளர் மீது வழக்குப்பதிவு

திருமங்கலம், ஜன. 25: பொதுக்கூட்டம் நடத்திய இடத்தில் அளவுக்கதிகமாக பிளக்ஸ்போர்டுகள் வைத்ததாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நகர செயலாளர் மீது திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. போலீசார் அனுமதி மறுத்ததால் கோர்ட் உத்தரவு வாங்கி அக்கட்சியினர் பொதுகூட்டத்தை நடத்தினர். அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மதுரை ரோட்டில் ராஜாஜிசிலை அருகே நடந்த கூட்டத்தில் இருபுறமும் ஏராளமான பிளக்ஸ் பேனர்களை அமமுகவினர் வைத்திருந்தனர்.விதிமுறைகளை மீறி அதிகளவில் பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்ததாக அக்கட்சியின் திருமங்கலம் நகர செயலாளர் வைரவன் மீது டவுன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags : City Secretary ,Blox Ammus ,
× RELATED திருவள்ளூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்