×

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் 2வது நாளாக ஸ்டிரைக் சாலை மறியலில் ஈடுபட்ட 5,496 பேர் கைது

பெரம்பலூர்,ஜன.24: பெரம்பலூர் மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமை ப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் 580பெண்கள் உள்பட 1035பேர் கைது செய்யப்பட்டனர்.பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 22ம்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனையொட்டி முதல்நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 2ம் நாளான நேற்று ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் அனை வரும் பெரம்பலூர் கலெக்டர்அலுவலகம் முன்பு திரண்டனர். போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்களான,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர்  ராஜேந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்டத் தலை வர் ராஜ்குமார்,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தயாளன், தமிழக ஆரம்பப்பள்ளி  ஆசிரியர்கூட்டணி மாவட்டச் செயலாளர் அருள்ஜோதி, தமிழ்நாடுஅரசுப் பணியாளர்  சங்க மாநில துணைத் தலைவர் கவியரசன், தமிழ் நாடு உயர்நிலை மற்றும்  மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்டத் தலைவர் ராமர் ஆகியோர் தலைமை  வகித்தனர்.
பின்னர் பாலக்கரை செல்லும் சாலை, தேசிய நெடுஞ்சாலைக்கான இணைப்புச் சாலை ஆகிய வற்றின் சந்திப்பில் அமர்ந்து 10 நிமிடங்கள் கோஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியே அதிகம் பஸ்கள் வராததால் பிறகு பாலக்கரைக்கு சென்று அங்கும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியலில் ஈடுபட்ட 580 பெண்கள் உள்பட 1035 பேரை டிஎஸ்பி ரவீந்தி ரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
3ம்நாளான இன்றும் (24ம்தேதி) மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.  அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய நான்கு தாலுக்காவிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நான்கு இடங்களிலும் தலா ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மற்றும் ஊராட்சி துவக்கப்பள்ளி களில் பணியாற்றும் 2005 ஊழியர்களில் 1620 ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சத்துணவு மற்றும் ஊராட்சி பள்ளிகளில் 80 சதவீதம் பூட்டப்பட்டுள்ளது. இதுபோன்று நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெருமளவில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம்:  ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நம்பிராஜ்  துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர்  இளம்பரிதி, ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்மணி உள்ளிட்டோர் பேசினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 196 பெண்கள் உட்பட 461 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்தனர்.

Tags : Strike Road ,Perambalur ,Ariyalur district ,JAKA-Jio Alliance ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...