×

தூத்துக்குடியில் ரூ.4 லட்சம் ஏலச்சீட்டு பணம் மோசடி

தூத்துக்குடி, ஜன. 24. தூத்துக்குடி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர், செட்டியூரணியை சேர்ந்த அருணாசலம் மனைவி பத்ரகாளி என்பவரிடம் ஏலச்சீட்டு பணம் கட்டியுள்ளார். இந்த சீட்டு பணம் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 711ஐ திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக தெரிகிறது. பணத்தை திரும்ப கேட்ட போது பத்ரகாளி, அருணாசலம், முத்துலட்சுமி, வைகுண்டராஜ் ஆகியோர் சேர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bidder ,Rs ,
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...