×

‘குடிமகன்கள்’ அட்டகாசம் தாங்கலீங்க... தாயின் கள்ளக்காதலனை குத்திக்கொன்ற மகன் கைது

மதுரை, ஜன.22: மதுரை மாப்பாளையம் அன்சாரிநகரை சேர்ந்தவர் பிச்சைமணி மனைவி ஜெயந்திராணி(40). இவர்களது மகன் மணி இளவரசன்(24). பிச்சைமணி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதே பகுதியில் வசிக்கும் கொத்தனார் நடராஜனுக்கும், ஜெயந்திராணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த மணி இளவரசன் தனது தாயை கண்டித்தார். ஆனால் அவர் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
இது பிடிக்காமல் மணிஇளவரசன், அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மணிஇளவரசன் தனது தாய் வீட்டிற்கு வந்தார். அங்கு கள்ளக்காதலன் நடராஜன் இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிஇளவரசன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், நடராஜனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றார். படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடராஜன், சிகிச்ைச பலனளிக்காமல் உயிரிழந்தார். இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மணிஇளவரசனை கைது ெசய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கருந்தலைப் பூச்சி தாக்கம் குறித்து...