×

போச்சம்பள்ளியில் சுண்ணாம்பு விற்பனை மந்தம்

போச்சம்பள்ளி, ஜன.10:  புதிய வகை பெயிண்ட் பொருட்களால், சுண்ணாம்பு விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.  பொங்கல் பண்டிகை வரும் 15ம் ேததி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. போச்சம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில், பொங்கல் பண்டிகை ஒரு வாரம் வரை மக்கள் கொண்டாடுகின்றனர். இதற்காக 15 நாட்களுக்கு முன்பே சுண்ணாம்பு அடித்து வீடுகளை சுத்தம் செய்கின்றனர்.

போச்சம்பள்ளி பகுதியில் கிடைக்கும் ஓடைக்கல்லை சிறிதாக உடைத்து பின்னர், தேங்காய் மட்டை, கரி ஆகியவற்றை பயன்படுத்தி 5 மணிநேரம் சூளையில் வேக வைத்து சுண்ணாம்பை தயாரிக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுண்ணாம்பு விற்பனை அதிகமாக இருக்கும். தற்போது, புதிய வகை பெயிண்ட்கள் வரவால், வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிப்பது வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சுண்ணாம்பு விற்பனை வெகுவாக குறைந்து விட்டதால் சுண்ணாம்பு தயாரிப்பவர்கள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் ஆயுதங்களுடன் கைது