×

வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பஸ் மறியல் 80க்கும் மேற்பட்டோர் கைது

காரியாபட்டி, ஜன. 10: காரியாபட்டி பஸ் நிலையத்தின் முன்பு அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஸ் மறியலில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். காரியாபட்டி பஸ் நிலையத்தின் முன்பு அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சிஐடியூ, வி.ச. வி.தொ.ச சார்பில் பஸ் மறியல் போரட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட நிர்வாகி பரசிவம், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் குமராண்டி வரவேற்றார். மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.பஸ் நிலையம் முன்பு அருப்புக்கோட்டை மதுரை மெயின் ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோரை காரியாபட்டி போலீசார் கைது செய்தனர்.

Tags : bus strike ,strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து