×

திமுக சார்பில் கிராம சபை கூட்டம்

சிவகங்கை, ஜன.10: திருப்புவனம் மேற்கு ஒன்றியம் சார்பில் பல்வேறு ஊராட்சிகளில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.
சொட்டதட்டி, புலியூர், கரிசல்குளம், பாட்டம், செங்குளம், தவத்தாரேந்தல் ஆகிய கிராமங்களில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வசந்திசேங்கைமாறன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். திமுக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் கிராமத்தினரிடம் கிராம சபை கூட்டம் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் முதியோர், விதவை உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, சாலை, குடிநீர், போக்குவரத்து வசதி, மகளிர்க்குழு கடன் மற்றும் கிராமங்களின் அடிப்படை வசதி தேவை குறித்து கிராமத்தினர் பேசினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் விண்ணப்ப மனு அளித்தனர். இந்நிகழ்ச்சிகளில் திமுக ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Tags : meeting ,Gram Sabha ,DMK ,
× RELATED கிராம சபை கூட்டங்களில் மீண்டும்...