×

பாலத்தடுப்பு மீது பைக் மோதி விவசாயி பலி

விராலிமலை, ஜன.10:  விராலிமலை அருகே கொடும்பாளூர்  இடையப்பட்டி  பகுதியை சேர்ந்த முத்தன் (45), விவசாயி. இவர் தனது மகன் பாலகிருஷ்ணன் மற்றும் உறவினர் ரங்கசாமி மகன்  வரதராஜு ஆகியோர் ஒரு பைக்கில் நேற்று முன்தினம்  மனப்பாறை அருகேயுள்ள திருமலையான்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பும்போது மணப்பாறை-புதுகை சாலையில் உள்ள குட்டியபட்டி பிரிவு ரோடு அருகே வரும்போது நிலை தடுமாறி பாலக்கட்டையில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்தன் சம்பவ இடத்தில் பலியானார். பாலகிருஷ்ணன் மற்றும் வரதராஜு ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : crew ,balcony ,
× RELATED ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு