மதுரை, ஜன. 9:மதுரை வடக்கு மாவட்டத்திலுள்ள திமுக ஒன்றிய செயலாளர்கள். நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி மத்திய பா.ஜ. அரசு, மாநில அதிமுக அரசின் அவலங்களை மக்களிடம் விளக்குவதற்காக ஊராட்சி சபை கூட்டம் ஜனவரி 9 (இன்று) முதல் நடைபெறும். அதன்படி நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் மதுரை கிழக்கு தொகுதி ஒத்தக்கடையில் இன்று காலை 9 மணிக்கும், பகல் 12 மணிக்கு இரணியம் கிராமத்திலும் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்கிறார். சோழவந்தான் தொகுதி அலங்கநல்லூர் ஒன்றியத்தில் தலைமை கழக பிரதிநிதி பாலவாக்கம் சோமு, வாடிப்பட்டி ஒன்றியத்தில் தலைமை கழக பிரதிநிதி சிவாஜி, மேலூர் தொகுதி கொட்டாம்படடி ஒன்றியத்தில் தலைமை கழக பிரதிநிதி சட்டத்துறை துணை செயலாளர் கண்ணதாசன், மேலூர் ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி பங்கேற்கிறார்கள். தொடர்ந்து ஜனவரி 10ம் தேதியும் (நாளை) அதன் பிறகு தை பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 19ம் தேதியில் இருந்தும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெறும். இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.