×

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 16ம் தேதி டாஸ்மாக் கடை மூடல்

ஊட்டி, ஜன. 8: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் கிளப்புகள் மூடப்பட்டிருக்கும். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினம், 21ம் தேதி வள்ளலார் நினைவு தினம் மற்றும் 26ம் தேதி குடியரசு தினத்ைத முன்னிட்டு தமிழ்நாடு இந்த மூன்று நாட்களும் சில்லரை மது விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகளின் 1981ன்படி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல்.2 உரிம தலங்கள் (கிளப்புகள்) ஆகியவை மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது. இந்த உத்தரவினை மீறி கடைகள் திறந்தால் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கிளப் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

Tags : closure ,store ,Tashmak ,Thiruvalluvar ,
× RELATED அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக்...