×

திமுக பொதுக்கூட்டம்

பந்தலூர், ஜன.8: சேரம்பாடி பஜாரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பந்தலூர் ஒன்றிய திமுக செயலாளர் சிவானந்தராஜா தலைமை வகித்தார். வார்டு செயலாளர் மகாவிஷ்ணு வரவேற்று பேசினார். ஒன்றிய நிர்வாகிகள் செய்து முகமது, குழந்தைவேலு, ஞானசேகர், சுபாசினி, கணபதி, மாவட்ட பிரதநிதிகள் கணபதி, சிவகுமார், ஊராட்சி செயலாளர்கள் சிவகுமார், அன்வர் அப்துல்லா, தாமோதரன், குருநாதன், கதிரேசன்,கலைச்செல்வன்,சிவநாதன்,ரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த விழாவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.முன்னதாக நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, பாண்டியராஜ், நகர செயலாளர்கள் காசிலிங்கம், ராஜேந்திரன், கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாக்கத்தலி,நெல்லியாளம் நகர துணை செயலாளர் சிவசுப்பிரமணியம், நெல்லியாளம் நகராட்சி முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் பொதுகுழு உறுப்பினர் ராஜா தலைமைகழக பேச்சாளர்கள் ஆலன், தங்கராஜ் உள்ளிட்டோர் பேசினார்கள்.

Tags : DMK ,meeting ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி