×

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் கொடைக்கானலில் ஆமைவேகத்தில் நடக்குது பணி குண்டாறு திட்டத்தால் குண்டும், குழியுமான சாலைகள்

கொடைக்கானல், ஜன. 8: கொடைக்கானலில் ஆமைவேக்தில் நடக்கும் குண்டாறு குடிநீர் திட்ட பணிகளால் சாலைகள் குண்டும், குழியுமாக கிடக்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கொடைக்கானலில் கீழ் குண்டாறு குடிநீர் திட்டம் கால அவகாசத்தையும் மீறி பல மாதங்களாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இத்திட்டத்திற்காக நகர் பகுதி முழுவதும் பல கிமீ அளவுக்கு சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆமைவேகத்தில் நடைபெறும் இப்பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகனஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அவலமும் நடக்கிறது. குறிப்பாக கொடைக்கானல் அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி பகுதிகளில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இங்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மண், கற்களை போட்டு மூடியுள்ளதால் டூவீலர்களில் வருவோர், பாதசாரிகள் தினந்தோறும் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே இதுபோன்ற அரைகுறையாக மூடப்பட்ட பள்ளங்களை மூடுவதுடன் குடிநீர் திட்ட பணிகளையும் விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jyotidh Rathna ,Kodaikanal ,KP Vidyadharan ,Task Force Work Scheme ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்