×

மனோ கல்லூரி மாணவருக்கு மனோஜ்பாண்டியன் நிதியுதவி

வீரவநல்லூர், ஜன.4: அம்பாசமுத்திரத்தை அடுத்த சிவந்திபுரம் அருகேயுள்ள வராகபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் மரியதாஸ் மகன் திவான் துரைசாமி(24). இவர் சேரன்மகாதேவியை அடுத்த கோவிந்தபேரி மனோ கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார். இவர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறவுள்ள இந்தோ-நேபாள் ப்டெரேசன் கோப்பை 2019 என்ற சர்வதேச கைப்பந்து போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.  தகவலறிந்த முன்னாள் எம்.பியும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான மனோஜ்பாண்டியன் மாணவரின் ஏழ்மை நிலைமையை கருத்தில் கொண்டு போட்டிக்கு சென்றுவர ரூ.40 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

Tags : Manojpandian ,college student ,
× RELATED கிடாரக்குளத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு