வீரவநல்லூர், ஜன.4: அம்பாசமுத்திரத்தை அடுத்த சிவந்திபுரம் அருகேயுள்ள வராகபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் மரியதாஸ் மகன் திவான் துரைசாமி(24). இவர் சேரன்மகாதேவியை அடுத்த கோவிந்தபேரி மனோ கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார். இவர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறவுள்ள இந்தோ-நேபாள் ப்டெரேசன் கோப்பை 2019 என்ற சர்வதேச கைப்பந்து போட்டிக்கு தேர்வாகி உள்ளார். தகவலறிந்த முன்னாள் எம்.பியும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான மனோஜ்பாண்டியன் மாணவரின் ஏழ்மை நிலைமையை கருத்தில் கொண்டு போட்டிக்கு சென்றுவர ரூ.40 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.