×

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஜெயங்கொண்டம், ஜன. 4:ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. அதன்படிஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், ஆவிச்சரமடையார், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆகிய கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனீஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், திருக்களப்பூர் திருக்கோடி வனத்தீஸ்வரர், புதுச்சாவடி கல்யாண சுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர் ேகாயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருத்துளார் அருளுடைய நாதர், வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், ஸ்ரீபாலாம்பிகை உள்ளிட்ட சிவன் கோயிவில்களில் நேற்று பிரதோஷவிழா நடைபெற்றது. நந்தியெம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஜெயங்கொண்டம் கழுமாலைநாதர் கோயில்களில் நந்தியெம்பெருமானின் பிரகார உலா நடந்தது.

Tags : Prado ,temples ,Shiva ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு