×

நத்தம் அருகே மணல் திருடுவதில் அதிமுகவினர் மோதல் இரண்டு பேர் கைது: ஜேசிபி, டிராக்டர் பறிமுதல்

நத்தம், டிச. 4: நத்தம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளுவதில் அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுெதாடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்ததுடன், ஜேசிபி, டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.நத்தம் அருகே காக்காபட்டி பகுதியில் ஐயங்கொண்டன்குளம் உள்ளது. இங்கு மணல் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஆளுங்கட்சியினர் போட்டிப்போட்டு மணல் கடத்தி வருகின்றனர். இதனை போலீசார் கண்டும், காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று கோவில்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கண்ணன் தரப்பினர் டிராக்டரில் மணல் அள்ள சென்றனர். இதனை அதே கட்சியின் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சிவா மற்றும் அவரை சார்ந்தவர்கள் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தகராறை விலக்கி விட்டு மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜேசிபியை பறிமுதல் செய்தனர். மேலும் மணல் திருட முயன்ற கண்ணன் தரப்பை சேர்ந்த ஜேசிபி டிரைவர் சுரேஷ்குமார், டிராக்டர் டிரைவர் பிரதீப் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இப்பகுதியை சேர்ந்த சந்திரமுகி என்பவர் கூறுகையில், ‘ஐயங்கொண்டன்குளம் பகுதியில் மணல் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது. மணல் அள்ளும் போட்டியில் அதிமுகவினரிடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.திருட்டு மணல் அள்ளுவதில் அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Natham ,JCB ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...