×

திருவதிகையில் பிரதோஷம்

பண்ருட்டி, ஜன. 4: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பெரியநாயகி அம்மாள், வீரட்டானேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. சிவாலயத்தில் நந்தி பகவானுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் செய்யப்பட்டன.
பிரதோஷத்திற்கு வந்த பக்தர்கள் அருகில் உள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்தனர். பண்ருட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து நந்தி பகவானை தரிசனம் செய்தனர்.

Tags : Pradosham ,Thiruvathithi ,
× RELATED சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி: கோயில் நிர்வாகம்