×

இலுப்பூரில் ரூ.7.87 லட்சம் கட்டிட கம்பிகள் கொள்ளை 2 பேர் கைது, வேன் பறிமுதல்

இலுப்பூர், ஜன.4:  இலுப்பூர்-புதுக்கோட்டை சாலை மேட்டு சாலையில் இரும்பு கடை வைத்திருப்பவர்  செல்வராஜ்(39). இவர், கடந்த 1ம் தேதி கடையை மூடிவிட்டு நேற்று முன்தினம்  காலை கடையை திறந்தபோது கடையில் இருந்த கம்பிகள் கொள்ளை போனது கண்டு  அதிர்ச்சி அடைந்தார்.  இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில்  இலுப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், புதுக்கோட்டை  பூசைதுரை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் என்ற டீசல் முருகேசன் என  தெரியவந்தது. முருகேசனை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய  விசாரனையில், திருடிய கம்பிகளை திருச்சியில் இரும்பு கடை வைத்திருக்கும் வியாபாரி இலுப்பூரை சேர்ந்த ஜாகீர் உசேன் (50) என்பவரிடம்  விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜாகீர்உசேனை கைது செய்த  போலீசார் இலுப்பூரில் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ.7.87 லட்சம்  மதிப்புள்ள இரும்பு கம்பிகளை கைப்பற்றினர். மேலும் இரும்புகளை திருட  பயன்படுத்திய வேன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில்  வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : robberies ,persons ,
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்