×

ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் நினைவு நாள் இலவச கண்பரிசோதனை முகாம்

நாகை, ஜன.3: நாகை பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர்  வின்சென்ட் தண்டபாணி பிள்ளையின்  13ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில்  கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆனந்த், முன்னாள்  வேளாண் விற்பனை குழு தலைவர்  அம்பலவாணன், பொறியியல் கல்லூரி ஆலோசகர்  லட்சுமி நாராயணன், கலவி நிறுவனங்களின்  செயலாளர் மகேஸ்வரன்.  இயக்குனர் சங்கர்,நிர்வாக அலுவலர்  குமார், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் விடியலை நோக்கி எனும் தலைப்பில்  பேசுகையில்,
உங்களுடைய தாய், தந்தையர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு  உங்களை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் என்பதை மனதில் கொண்டு  சிறப்பாக படித்து  நல்ல வேலையில் அமர வேண்டும்  என்றார். நிறுவனர் நாளை முன்னிட்டு   ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் , மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்  மற்றும் பாண்டிச்சேரி  அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச மாபெரும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் 300க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். 60 பேர்  இலவச அறுவை கண்சிகிச்சைக்காக  அழைத்து செல்லப்பட்டனர்.  விழாவில் நாகை ரோட்டரி சங்கம், லயன்ஸ்சங்கம், வர்த்தகர் சங்கம் , ஜேசிஐ  சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்வி நிறுவன  இயக்குனர் சங்கர் வரவேற்றார். முடிவில் கல்வியியல் கல்லூரி முதல்வர் முருகதாஸ் நன்றி கூறினார்.

Tags : Eye Examination ,Isaac Newton Institute of Educational Institutions Memorial Day ,Camp ,
× RELATED கோவில்பட்டி பள்ளியில் மாநில கபடி பயிற்சி முகாம்