×

காரைக்கால் மார்க் துறைமுகம் சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

காரைக்கால், ஜன.3: காரைக்கால் மார்க் துறைமுகம் சார்பில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் வளாகத்தில் நாளை (4ம் தேதி) நடைபெறுகிறது. இது குறித்து, காரைக்கால் மார்க் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: காரைக்கால் மேல வாஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் மார்க் துறைமுகம், முதன்முறையாக, எல்.அண்டு டி நிறுவனத்துடன் இணைந்து, சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை நாளை (4ம் தேதி) காலை 9.30 மணி முதல் காரைக்கால் பஸ் நிலையம் எதிரே உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டிடத்தில் நடத்துகிறது.இம்முகாமில், ஆசாரி, கொத்தனார், பிட்டர் மற்றும் எலக்ட்ரிசியன் ஆகிய 4 வேலைகளுக்கு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்கிறது. தட்சு, கொத்தனார், பிட்டர் ஆகிய 3 வேலைவாய்ப்பிற்கு 5ம் வகுப்பு முதல் ஐடிஐ வரை படித்திருக்க வேண்டும். எல்க்ட்ரிசியனுக்கு 10ம் வகுப்பு முதல் ஐடிஐ வரை படித்திருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  வேலைவாய்ப்பு முகாமிற்கு வருவோர் தங்களது அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களையும் எடுத்து வரவேண்டும். தேர்வு செய்யும் நபர்களுக்கு காஞ்சிபுரம் எல்.அண்டு.டி நிறுவனத்தில் அடுத்த 3 மாதத்திற்கு தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் 100 சதவிகிதம் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Special Campaigning Camp ,Karaikal Mark Port ,
× RELATED காரைக்கால் மார்க் துறைமுகம் சார்பில்...