×

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: 7 பேர் கும்பல் வெறிச்செயல்

சென்னை, ஜன. 3: தாம்பரம் அருகே, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 7 பேரை தேடி வருகின்றனர்.தாம்பரம் இரும்புலியூர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் யுவராஜ் (எ) பப்லு (24). தனியார் நிறுவனத்தில், உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்துவிட்டு தற்போது வேலை இல்லாமல் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் அதிகாலை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது யுவராஜிக்கும் அதேப் பகுதியை சேர்ந்த டோரி மணி மற்றும் ராஜ் என்பவர்களுக்கும் போதையில் தக ராறு ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிகொண்டனர். அங்கு இருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டதால் யுவராஜ் வீட்டுக்கு சென்றார்.அன்றிரவு டோரி மணி மற்றும் அவனது நண்பர்கள் சிலர் யுவராஜ் வீட்டுக்கு சென்று அவரை தேடியுள்ளனர். ஆனால் யுவராஜ் அங்கு இல்லாததால் வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் அடித்து உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.இதற்கிடையே யுவராஜ் மற்றும் அவரது நண்பர் இரும்புலியூர் ஏரிக்கரையில் மது அருந்திக்கொண்டிருந்த தகவல் டோரி மணிக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, டோரி மணி, தனது நண்பர்களுடன் விரைந்து சென்று, யுவராஜிடம் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் யுவராஜை சரமாரியாக வெட்டினர். இதில் யுவராஜ் சம்பவ இடத்திலேயே, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். பின்னர் அவரது உடலை இரும்புலியூர் ஏரியில் வீசிவிட்டு கொலையாளிகள் தப்பி சென்றனர்.நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் சடலம் கிடப்பதை பார்த்து சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், போலீசாரின் விசாரணையில், அது யுவராஜின் உடல் என தெரியவந்தது.இதையடுத்து போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணி ராஜ் ஆகிய இருவர் உள்பட 7 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Celebration ,People Mobster ,
× RELATED எதிர்கால தமிழ்நாட்டிற்கான...