×

கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில்ஏடிஎம் இயந்திரம் உடைத்து கொள்ளை முயற்சி மர்ம நபர்களுக்கு வலை

கலசபாக்கம், ஜன.3: கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில் ஏடிஎம் இயந்திரம் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் 20 கிராமத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வாடிக்கையாளராக உள்ளனர்.இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன் வங்கி நாயுடுமங்கலம் கூட்ரோட்டுக்கு ஏடிஎம் வசதியுடன் இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டு என்பதால் விடுமுறை விடப்பட்டது.இதைத்தொடர்ந்து, நேற்று வழக்கம் போல் வங்கி திறக்கப்பட்டது. அப்போது, வங்கி அருகே உள்ள ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து, வங்கி அலுவலர்கள் கலசபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது குள்ளா அணிந்த 2 மர்ம நபர்கள் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்றது தெரியவந்தது.ஆனால், ஏடிஎம் மெஷினில் இருந்து பணத்தை எடுக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர், வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான பகுதியில் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kalaipapakam ,Naidumangalam ,
× RELATED காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு 10...